Thursday, March 21, 2013

இனியாவுடன் ஆட்டம் போட்ட வெங்கட் பிரபு

கொலிவுட்டில் "தமிழ்படம்" இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கும் 2வது படம் "ரெண்டாவது படம்".
விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்ட், ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார்கள். விஜயலட்சுமி வில்லியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில். தற்போது புதிதாக பாடல் ஒன்றை சேர்த்துள்ளனர்.
"ரோசாப் பூவொன்று" என்று தொடங்கும் இந்த பாடலை 1980களில் பிரபலமான மெட்டில் போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் கண்ணன். அந்தக் காலத்து ஸ்டைலிலேயே நடனம் அமைத்திருக்கிறார் நடன இயக்குனர் கல்யாண்.
இது குறித்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் கூறுகையில், கதையோடு தொடர்புடைய பாடல் காட்சிதான். 1980 பாணியிலான முகம் கொண்டவரை தேடியபோது வெங்கட்பிரபு நினைவு வந்தது.
விடயத்தை சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டு மறு நாளே ஆட வந்துவிட்டார். உடன் ஆடுபவர் இனியா என்றதும் இன்னும் மகிழ்ச்சியாக ஆடினார்.
பாடலின் ஓடியோ யூ டியூப்பில் செம ஹிட்டாகியிருக்கிறது என்றும் படம் வெளியானதும் எல்லா தொலைக்காட்சியிலும் இந்தப் பாட்டுதான் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment