Thursday, March 21, 2013

முதல் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி: பரதேசி பூர்ணிமா

'பரதேசி' படத்துக்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
இவ்விருதை 32 வயதான ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி பெற்றுள்ளார்.
சென்னையை சேர்ந்த இவர் விருது பெற்றது குறித்து கூறுகையில், 'பரதேசி' எனக்கு முதல் படம். சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்தது இன்ப அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை. தேசிய விருதை நான் எதிர்பார்க்கவில்லை. பெரிய கௌரவமாக கருதுகிறேன்.
தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அந்த காலத்தில் எப்படி இருந்து இருப்பார்கள் என்பது குறித்து ஆராய்ச்சி செய்து ஆடையை வடிவமைத்தோம்.
இதற்காக நிறைய நாட்கள் நூலகத்திலேயே இருந்தேன். நிறைய புத்தகங்கள் படித்து குறிப்பு எடுத்தேன். இயக்குனர் பாலா என் சகோதரர் மாதிரி. எங்கள் குடும்பத்தில் ஒருத்தர்.
ஒரு நாள் அவர் அலுவலகத்துக்கு என்னை அழைத்து இந்த வாய்ப்பை கொடுத்தார் என்றும் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment